லிதியம் மின்கலத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜோன் குட்டினாப் தனது 100 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (25) காலமானார்.
கையடக்கத் தொலைபேசி, கணனி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு மீள மின்னேற்றம் செய்யக்கூடிய ஆற்றலுடனான லிதியம் ஏற்றம் கொண்ட மின்கலம் உருவாக்கியதற்காக 2019 ஆம் ஆண்டு அவர் நோபல் பரிசை வென்றார்.
தனது 97 ஆவது வயதில் அந்த பரிசை வென்றதன் மூலம் நோபல் பரிசு வென்ற மிக வயதானவர் என்றும் அவர் பதிவானர்.
1980 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோதே ஜோன் குட்டினாப் லிதியம் அயனி மின்கலனை கண்டுபிடித்தார்.
குறைந்த எடை கொண்ட சக்தி வாய்ந்த அந்த மின்கலம்கள் தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மின்சார வாகனங்களை இயக்க இந்த மின்கலங்கள் உதவுகின்றன. மடிக்கணினிகள், கைபேசிகள் போன்ற நவீன கருவிகளுக்கும் இந்த மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சூரிய சக்தித் தகடுகள் போன்ற மிகப்பெரிய சாதனங்களுக்கும் அவை பயன்படும்.
1922 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார்.
யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலுக்கான கலாநிதி பட்டம் பெற்றார்.
No comments:
Post a Comment