கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தினூடாக எமது மக்களுக்கும் நாட்டுக்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதிலேயே, ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்தார்.
கெளதாரிமுனை காற்றாலை திட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளால் கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் கருத்திலெடுக்கப்பட்டு, மக்களின் நன்மைகளுக்கு முன்னிரிமையளிக்கப்படும்.
இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் பூநகரி, கௌதாரிமுனையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலைத் திட்டத்தின் காரணமாக கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகவும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். இதனால், சமூக மற்றும் வாழ்வாதார நன்மைகளையும் இம்மக்கள் பெறுவர். இதற்கு இந்திய முதலீட்டாளர்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கௌதாரிமுனை கிராமத்திற்கான சுமார் 17 கிலோ மீற்றர் வீதி காபபெற் வீதியாக அமைக்கப்படும். இங்கு, சுமார் 40 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகளும் உருவாக்கப்படவுள்ளன.
அதேபோன்று, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்கள் உத்தவரவாதம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment