(எம்.ஆர்.எம்.வசீம்)
எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என நீர் வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நீர் வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்ணாயக்க தெரிவிக்கையில்,
எமது ஒன்றிணைந்த நீர் வழங்கல் தொழிற்சங்கம் 4ஆம் திகதி அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக் கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்ததோம்.
ஆனாலும் குறைந்த பட்சம் நீர் வழங்கல் சபை தலைவராே அல்லது அமைச்சராே எமது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட நேரம் வழங்கவில்லை.
அதனால் எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள நாங்கள் திர்மானித்தாேம். அதன் பிரகாரம் நாங்கள் அலுலக மற்றும் நுகர்வோர் சேவை நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்து ஒதுங்கிக் கொள்கிறோம்.
அத்துடன் எமது தொழிற்சங்க போராட்டம் காரணமாக மக்களுக்கு ஏற்படுகின்ற செளகரியங்களை கருத்திற் கொண்டு, நீர் சுத்திரகரிப்பு நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டு செல்கிறோம்.
நீர் தடைகள் ஏற்படும்போது. அதனை திருத்தும் நடவடிக்கைகளில் சற்று தாமதம் ஏற்படும். அதனை திருத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம். அதனால் ஒரு சில இடங்களில் நீர் விநியோகம் குறைவடையும் ஆபத்து இருக்கிறது.
அத்துடன் எமது பிரதான கோரிக்கையாக இருந்தது, நாங்கள் சுகயீன விடுமுறை எடுக்காமல் அந்த தினங்களில் பணி புரிந்தமைக்கான கொடுப்பனவை வழங்குமாறே கேட்டிருந்தோம். இதற்காக பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பணம் இருக்கிறது. ஆனால் நிதி அமைச்சின் செயலாளர் தனது அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்து, இதனை நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
எமது கோரிக்கை நியாயமானது. எமக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு சட்ட ரீதியிலானது. அதனால்தான் அதனை வழங்குமாறு நாங்கள் கோருகின்றோம். இவ்வாறான சாதாரண கோரிக்கையை நிறைவேற்றாமல் அதனை தொடர்ந்து இழுத்தடிப்பதனால் தொழிற்சங்க போராட்டம் நீடிக்கும். இதன் மூலம் மக்கள் அசெளகரியங்களுக்கு ஆளானால் அதன் பொறுப்பை எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்றாமல் இருக்கும் அதிகாரிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment