தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றும் எல்லோரிடையேயும் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
புதன்கிழமை (01) கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயளாளர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், குறிப்பாக வரலாற்றிய இம்முறை அதிக எண்ணிக்கையிலான வேட்பு மணுக்கல் தாக்கல் செய்திருந்தாலும், தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படவில்லை.
அரசாங்கம் தேர்தலை முகங்கொடுப்பதற்கு தயாராக இல்லாத காரணத்தினால் அவர்கள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்துகின்றமை மட்டுமல்லாமல் மக்களையும் அச்சுறுத்துகின்றனர்.
இந்த தேர்தலை சிலர் சிறிய தேர்தலாக கருதுகிறார்கள், இதனை சிறிய தேர்ததலாக கருத முடியாது. 2018 ஆம் ஆண்டு அதிக உள்ளூராட்சி மன்றங்களை மொட்டு கைப்பற்றிய காரணத்தினால்தான் சென்ற ஐனாதிபதித் தேர்தலில் அவர்களால் 69 இலட்சம் வாக்குகளை பெறமுடிந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எமது சமூகம் விளிப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைக்கு சிலர் கோட்டபாய ராஜபக்ஸ காரணம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் தவறை மறைக்கிறார்கள்.
69 இலட்சம் வாக்குகளை பெற்ற கோட்டபாய ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட நிலையை நாம் விளங்க வேண்டும். இனவாதத்தால் ஆட்சி பீடமேறிய காரணத்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்கள் விளங்கியிருக்கிறார்கள். சிறந்த தலைவரை அடையாளம் காண்கிறார்கள். எமது முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளாத சூழ்நிலை காணப்படுகிறது.
எப்படி மொட்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் இனவாதம் பேசினார்களோ அதே போன்று சிறுபான்மை கட்சிகளும் தேர்தல் காலங்களில் இனவாதம் பேசுகின்றனர்.
மேலும், 20 வது திருத்தத்திற்கு வாக்களித்தவர்களால் எமது முஸ்லிம் சமூகம் பட்ட இன்னல்களை எமது கண்முன்னெ விளங்கிக் கொண்டிருக்கின்றது, கோட்பாய ராஜபக்ஸவிற்கு 2/3 பெரும்பான்மையை வழங்கியது எமது சில முஸ்லிம் உறுப்பினர்களே, அவர்களே நாட்டின் எமது சமூகத்தின் இந்த நிலைக்கு காரணம். 20 வது திருத்தத்திற்கு வாங்களித்தவர்களுக்கு எந்த நடவடிக்கையும் அவர்களது கட்சித் தலைவரால் எடுக்கப்படவில்லை.
சிங்கள மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் ஐனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை துரத்தியிருக்கின்றார்கள், நாமும் உணர்ந்து நடக்க வேண்டும் எனவும் அதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முதலாவது படியாக பயன்படுத்த வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு திருகோணமலை மாவட்டத்திற்கு சுவாசம், பிரபஞ்சம் திட்டத்தினூடாகவும், குறுஞ்சாங்கேணி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய உதவிகளுக்கும் சஜித் பிரேமதாசவுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment