வர்த்தமானியில் சார்ள்ஸும் கையொப்பமிட்டார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

வர்த்தமானியில் சார்ள்ஸும் கையொப்பமிட்டார்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து பி.எஸ்.எம். சார்ள்ஸ் விலகவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின.

அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்றில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.

மேலும் வாக்காளர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கையெழுத்திட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment