நேற்று முன்தினம் (31) போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்டபோது தாக்கப்பட்டு உயிரிழந்த பொலிஸ் சார்ஜெண்ட், உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், கெபிதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அகம்பொடிகே சுனில் எனும் குறித்த பொலிஸ் சார்ஜெண்ட் நேற்றுமுன்தினம் (31) இடம்பெற்ற அமைதியின்மையை கட்டுப்படுத்த சென்ற வேளையில் மரணமடைந்திருந்தார்.
தனது கடமை வேளையில் இவ்வாறு உயிரிழந்த குறித்த பொலிஸ் சார்ஜெண்டுக்கு, ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரியின் இறுதிக் கிரியைகள் நாளை (03) வியாழக்கிழமை வாரியபொல சுமங்கள, இடை வீதி பொது மயானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment