ரூ. 3,054 மில்லியன் (ரூ. 305.4 கோடி) செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கம்பஹா மாவட்ட செயலகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் எம்.எஸ். சத்தியானந்த அதனை கண்காணிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (28) அங்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டின் பேரில் மார்ச் 2019 இல் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டடம் ஒன்பது மாடிகள் மற்றும் 250,000 சதுர அடி பரப்பைக் கொண்டது.
Sanken Construction pvt Ltd இதன் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துள்ளதோடு, மொரட்டுவை பல்கலைக்கழகம் இதற்கான ஆலோசனை சேவையை முன்னெடுத்து வருகிறது.
இப்புதிய மாவட்ட செயலக அலுவலக வளாகத்தில் 26 அரச நிறுவனங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சேவைகளை விரைவாக செய்து முடிக்க முடியும்.
ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் பொதுமக்களுக்காக ஒரு கரும பீடம் அதன் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டிருப்பது இதன் விசேட அம்சமாகும்.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் துரித சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment