நாட்டில் நாளொன்றுக்கு மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 12 பெண்கள் அடையாளம் காணப்படுவதாக புற்றுநோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் இந்த நோயினால் இருவர் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்திற்கு அமைவாக தற்பொழுது மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நோயை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை வசதிகள் மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தல் மற்றும் பரிசோதனையை மேற்கொள்வதில் பெண்கள் முன்னரிலும் பார்க்க கூடுதலான ஆர்வம் செலுத்துவதினால் இவ்வாறு நோயாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோயை தடுத்தல் அது தொடர்பாக தெளிவுபடுத்தும் மாதம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டத்தை தொடர்ந்து புற்றுநோயை தடுப்பதில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகின்றது.
முன்கூட்டியே அடையாளம் காணுவதினால் நோயிலிருந்து குணமடைய முடியும் என்று புற்றுநோய் தொடர்பாக விசேட வைத்தியர்களின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment