உலகளாவிய ரீதியில் இன்று (01) சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கையிலும் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
சிறுவர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு பஸ் வண்டியொன்றை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி ஜலனி பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment