பொதுமக்களின் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றதா ? கேள்வி எழுப்பியுள்ள கலாநிதி பாக்கியசோதி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

பொதுமக்களின் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றதா ? கேள்வி எழுப்பியுள்ள கலாநிதி பாக்கியசோதி

(ஆர்.ராம்)

அவசரகால நிலைமைகளை பிரகடனப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொதுமக்களின் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றதா என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாக இருக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீட்டுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றார்கள்.

அவர்கள் தமக்குள்ள அடிப்படை உரிமைகளின் பிரகாரம் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அந்த மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காகவே போராட்டத்தினை மேற்கொள்வதோடு முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள்.

ஜனநாயக அடிப்படையில் அவர்கள் தமது வெளிப்பாடுகளைச் செய்கின்றார்கள். எங்கும் அவர்கள் வன்முறைகளை பின்பற்றவில்லை. அவ்வாறான நிலையில் தற்போது, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக மக்கள் போராட்டங்களை கருத்திற் கொள்ளாத ஆட்சியாளர்கள் தற்போது அவசரகால நிலைமையை பிறப்பித்துள்ளார்கள். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலைமையானது பத்து நாட்கள் வரையில் அமுல்ப்படுத்தப்பட முடியும். தொடர்ந்து அமுலாக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமாகின்றது.

எனினும், எதிர்வரும் பத்து நாட்களுக்குள் அமைதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்தச் சட்டத்தினை பயன்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமில்லை.

குறிப்பாக, போராட்டங்களின்போது வன்முறைகளை தோற்றுவிப்பதற்கும் இச்சட்டம் காரணியாக அமையும் ஆபத்துக்களும் உள்ளன. ஆகவே, குறித்த சட்டமானது உடனடியாக மீளப்பெற்று மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரச தலைவர்களின் செயலற்ற தன்மைக்கு அதிருப்தி தெரிவித்து மகாநாக்க தேரர்கள் மீண்டும் கடிதம்

ஜனாதிபதி உள்ளிட்ட அரச தலைவர்களின் செயலற்ற தன்மைக்கு அதிருப்தி தெரிவித்து 3 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முன்மொழிவுகளை முன்வைத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு ஏற்கனவே இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

முன்மொழிவுகளின் அடிப்படையில் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி பதில் அளித்திருந்த போதிலும், ஜனாதிபதி மற்றும் எந்தவொரு உரிய அதிகாரிகளின் செயலற்ற தன்மை குறித்தும் மூன்று பௌத்த தலைமை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி முன்றாவது கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment