தெமோதரை வனப் பகுதிக்கு தீ வைப்பு : 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் முற்றாக தீக்கிரையானது - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

தெமோதரை வனப் பகுதிக்கு தீ வைப்பு : 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் முற்றாக தீக்கிரையானது

இராஜரத்தினம் சுரேஷ்குமார்

தெமோதரை புகையிரத நிலையத்தை சார்ந்த வனப் பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப் பகுதி தீக்கிரையானது.

பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப் பகுதி முற்றாக தீக்கிரையானது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சிறப்புமிக்க புகையிரத நிலையமாக தெமோதரை காணப்படுகின்றது.

இந்த புகையிரத நிலையத்தின் அமைப்பிற்கு இந்த மலைத் தொடர் பெரிதும் அழகான தோற்றத்தை அளிக்கின்றது.

இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டமையால் இந்த மலைத் தொடரில் காணப்பட்ட பாரிய மரங்கள் பசுமையான தோற்றம் அழிவடைந்து உள்ளது.
எமது சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் பொதுமக்களாகிய நாம் அவற்றை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி அவற்றை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இவ்வாறு வனப் பகுதிகள் அழிக்கப்படுவதால் நாமும் நமது எதிர்காலத்தையும் அளிக்கின்றோம் என்பதை மறந்து விடுகின்றோம்.

இன்றைய கால சூழ்நிலையில் எம் பொருளாதார நெருக்கடிக்கு சுற்றுச் சூழலும் பெரிதும் பங்கு வைக்கின்றது. எனவே எமது சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நேற்று 19.05.2022 ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் புகையிரத நிலையத்தை சார்ந்த 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப் பகுதி தீக்கிரையானது.

பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப் பகுதி முற்றாக தீக்கிரையானது.

No comments:

Post a Comment