மியன்மார் கடற்கரையில் 14 உடல்கள் மீட்பு : 35 பேர் உயிருடன் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

மியன்மார் கடற்கரையில் 14 உடல்கள் மீட்பு : 35 பேர் உயிருடன் மீட்பு

மியன்மார் கடற்கரையில் 14 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மியன்மார் கடற்கரையில் நேற்று 14 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியன்மாரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உட்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மவுங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு படகு சென்றதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment