முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் பி. சஷி மகேந்திரன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தரமற்ற நோயெதிர்ப்பு தடுப்பூசிகளை நாட்டின் வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பான வழக்கில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை வலுவிழக்கச் செய்ய எழுத்தாணை கட்டளையை பிறப்பிக்குமாறே குறித்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்கவும் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் மாளிகாந்த நீதவான் உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment