அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கடந்த வாரம் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதால் அரசாங்கத்திடம் 109 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த 109 பேரில் பொதுஜன பெரமுனவின் மேலும் 10 உறுப்பினர்களும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment