திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து : 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து : 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர், பட்டித்திடல் பகுதியில் லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (10) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸும், மூதூரிலிருந்து சேருவில நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்கள் வருகை தந்ததாகவும் இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் வாகனத்தில் சிக்கிய டிப்பர் வாகனத்தின் சாரதி, சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டதோடு, விபத்தில் அவரது கால்கள் சேதமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம், எம்.எம். நௌபீக்)

No comments:

Post a Comment