கிஷாந்தன்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பெருந்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் ஒன்று இனந்தெரியாத விசமிகளால் நேற்றிரவு (27) உடைக்கப்பட்டுள்ளது.
சேதமாக்கப்பட்ட மாதா சொரூபமானது ஆற்றில் வீசப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த 14 ஆம் திகதி லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்பாக அமைக்கபட்டிருந்து யேசுவின் திருவுரு சொரூபமும் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதத்தில் இவ்வாறு இரு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிறுபான்மை மதங்களுக்கு எதிராக விசமிகளால் முன்னெடுக்கபடும் நாசக்கார செயல்களின் பின்னணியை உடனடியாக தேடிஆராய்ந்து அரசாங்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment