எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தடவைகள் தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரையில் முறையான கலந்துரையாடலை நடத்தத் தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்வரும் 9 ஆம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சுகாதார அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment