கசகஸ்தான் - இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

கசகஸ்தான் - இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

கசகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி கஜகஸ்தானின் ஏயர் அஸ்தனா விமான சேவை டிசம்பர் முதல் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட சேவையை முன்னெடுக்கவுள்ளது.

ஏயர் அஸ்தனாவின் ஏயர்பஸ் A321LR என்ற விமானம் எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அடங்கலாக அல்மாட்டியிலிருந்து கொழும்புக்கு வாரத்துக்கு இருமுறை இயக்கப்படும்.

விமானம் கஜகஸ்தானின் அல்மாட்டியில் இருந்து அதிகாலை 05:30 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 11:30 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

கொழும்பில் இருந்து திரும்பும் விமானம் பிற்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு இரவு 19:40 மணிக்கு அல்மாட்டியை வந்தடையும்.

ஏயர் அஸ்தானா, கடந்த பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் அல்மாட்டிக்கும் இலங்கைக்கும் இடையே பட்டய விமானங்களை வெற்றிகரமாக இயக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment