ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை தீர்வில்லை : 29 முதல் தொடர் தொழிற்சங்க போராட்டம் - இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 21, 2021

ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை தீர்வில்லை : 29 முதல் தொடர் தொழிற்சங்க போராட்டம் - இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமாக தீர்மானம் கிடைக்கப் பெறவில்லை. எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்காவிடின் 29ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பின்உறுப்பினர் பி.எச் பி.பஸ்நாயக்க தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பள அதிகரிப்பு அல்லது 16000 ஆயிரம் ரூபா மாத கொடுப்பனவு வழங்கலை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடந்த 13 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்தோம். தொழிற்சங்கத்தினரது கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் பதிலளிக்கவில்லை.

கொவிட் தாக்கத்தினாலும், வாழ்க்கை செலுகள் அதிகரிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பொருத்தமற்ற செயற்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாவிடின் இரண்டு வாரத்திற்கு பின்னர் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டோம். 8 பிரதான அரச துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

60 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் 29ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் தொழில் உரிமை நீக்கப்பட்டு பேச்சுசுதந்திரத்தை முடக்கும் வகையில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment