தலவாக்கலை நகரை வசிப்பிடமாக கொண்ட சி. முத்துசாமி ஐயர் (வயது 72) என்பவரை காணவில்லையென அவரது குடும்பத்தவர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் இன்று வரை வீடு திரும்பவில்லையென அவரது குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரை கண்டால் உடனே தகவல் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த நபர் காணமால்போன இரண்டு தினங்களில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் மகனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய தந்தை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0766940905, 076 6184984 தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.
தலவாக்கலை குறூப் நிருபர்
No comments:
Post a Comment