தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, Epic Lanka Technologies நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியியலாளருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
சந்தேகநபரை பிணையில் விடுவித்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால் அவரது பிணையை நிராகரிக்குமாறு CID யினர் முன்வைத்த விடயத்தை கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையையும் நிராகரித்தார்.
34 வயதான குறித்த சந்தேகநபர், கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி திவுலபிட்டி, வல்பிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரால், தனது வீட்டிலிருந்தவாறு, 5 மணித்தியாலங்கள் செலவிட்டு குறித்த தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றிற்கு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment