(எம்.மனோசித்ரா)
பொதுப் போக்கு வரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்வதோடு, பஸ் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேல் மாகாணத்தில் சுமார் 6000 பஸ்கள் முன்னர் சேவையில் ஈடுபட்டன. ஆனால் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 900 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன. காரணம் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அந்த தொழில்களைக் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் எந்த காரணத்திற்காகவும் சுகாதார விதிமுறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment