பிரதமர் மஹிந்தவுடனான ஆசிரியர், அதிபர் பேச்சுவார்த்தை நிறைவு : நாளை சங்கங்கள் கூடி இறுதித் தீர்மானம் : இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்புக்கு இணக்கம்? - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

பிரதமர் மஹிந்தவுடனான ஆசிரியர், அதிபர் பேச்சுவார்த்தை நிறைவு : நாளை சங்கங்கள் கூடி இறுதித் தீர்மானம் : இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்புக்கு இணக்கம்?

சம்பளப் பிரச்சினை தொடர்பில், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வினை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடி நாளை தீர்மானிக்கவுள்ளதாக, அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை பி.ப. 3.30 வரையனா மூன்றரை மணித்தியாலங்களாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவையில், அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, 3 கட்டங்களில் 3 வரவு செலவுத் திட்டங்களில் சம்பள உயர்வை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இன்று (12) பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சம்பள அதிகரிப்பை 2 கட்டங்களில் வழங்க அரசாங்கம் இணங்குவதாக தெரிவித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 2022 ஜனவரியில் முதல் கட்ட சம்பள அதிகரிப்பும், 2023 இல் இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள், நாளையதினம் ஏனைய சங்கங்கங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment