மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் நியமனங்கள் கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் நியமனங்கள் கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்,வசீம் )

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த நிலையில் இதுவரையில் நியமனம் கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்காண வினாவின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு 8,334 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 6,746 பேர் சித்தியடைந்துள்ளனர்.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இவர்களில் சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படாதவர்களுக்கு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment