ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பினால் இலங்கை விமானப்படைக்கு 02 தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு மருத்துவ அம்பியூலன்ஸ் வாகனமும் நன்கொடையாக வழங்கும் வைபவம் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண பங்கேற்றிருந்தார்.
உலகம் பூராகவும் பரவி வரும் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள தடைகள் மத்தியிலும், கலாநிதி லால் திலகரத்ன மற்றும் ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பு போன்றவர்களின் அர்ப்பணிப்புடன் இந்த வாகனங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளனர்.
கொவிட்-19 தொற்று காரணமாக ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பின் அதிகாரிகளுக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை எனினும் வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர்கள் இந்நிகழ்வை காணக்கூடியதாக அமைந்தது.
இதன்போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மற்றும் கலாநிதி லால் திலகரத்ன ஆகியோர் நேரடி வீடியோ தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடினர்.
ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பினால் இலங்கை விமானப்படைக்கு இதுவரை காலமும் வழங்கிய உதவிகளுக்கும் தனது நன்றிகளை விமானப்படை தளபதி இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment