வட மாகாணத்தில் 459 கொரோனா தொற்றாளர்கள் : 8 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

வட மாகாணத்தில் 459 கொரோனா தொற்றாளர்கள் : 8 பேர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் நேற்று (08) புதன்கிழமை 459 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் செப்டம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 121 தொற்றாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 57 தொற்றாளர்களும், மன்னாரில் 27 தொற்றாளர்களும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும், கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 31 ஆயிரத்து 375 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 530 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 651 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment