திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 9,815 தொற்றாளர்கள் அடையாளம் : 24 மணித்தியாலங்களில் 7 பேர் உள்ளிட்ட 248 பேர் இதுவரை கொரோனாவுக்கு மரணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 9,815 தொற்றாளர்கள் அடையாளம் : 24 மணித்தியாலங்களில் 7 பேர் உள்ளிட்ட 248 பேர் இதுவரை கொரோனாவுக்கு மரணம்

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் சம்பவித்துள்ளது.

அத்துடன் 131 ஆண்கள், 104 பெண்கள் உள்ளிட்ட 235 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரைக்கும் 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 9,815 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் ஒரு வயது தொடக்கம் ஐந்து வயது வரை 147 சிறுவர்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 375 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 248 மரணம் சம்பவித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(ரொட்டவெவ நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment