சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் நேற்று முன்தினம் (19) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

தற்போதைய கொவிட்19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இரண்டாவது தடுப்பூசியை பெற்று 5 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment