பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த பிரபல போதைப் பொருள் வியாபாரிகள் இரண்டு பேர் முச்சக்கர வண்டியுடன் இன்று (20) கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கல்குடா - பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஹெரொயின் போதைப் பொருள் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்குடா பொலிஸ் பிரிவின் சில பகுதிகளில் அண்மைக் காலமாக ஒரு குழுவினர் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இது குறித்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில் இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் போதைப் பொருள் விற்பனையாளர்கள் என்ற ஓர் அமைப்பாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோரின் வழிகாட்டலில் கல்குடா பொலிஸ் பிரிவில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கேசரி
No comments:
Post a Comment