'வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குங்கள்' : வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் சுதர்ஷனி வேண்டுக்கோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

'வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குங்கள்' : வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் சுதர்ஷனி வேண்டுக்கோள்

(எம். எம். சில்வெஸ்டர்)

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள சிங்கள வானொலி ஒன்றுடனான உரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இவற்றை பெற்றுக் கொடுக்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதேவேளை, மூன்று இலட்சத்து அறுபது ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment