(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் முழு நாட்டு மக்களும் அவதானம் செலுத்தியுள்ளதாக அரச தாதிகள் சங்கத்தின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் சமன் ரத்னப்பிரிய மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்ற விவாதத்தின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்தித்த போதும், காணொளி மூலம் ஊடகங்கள் ஊடாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இது தவிர ஏனைய கட்சித் தலைவர்களும் பகிரங்கமாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் உயிர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்காமல் சகல கட்சி தலைவர்களிடமும் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒரு வார காலம் போதுமானது என்றும் நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment