இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் சுகாதார வழிகாட்டல்களுடன் இடம்பெற்ற விழாவினையடுத்து அவர் புதிய கடமைகளை பெறுப்ஏற்றுக் கொண்டார்.
பின்வரும் பிரிவுகள் அஜித் ரோஹனவின் கீழ் இருக்கும்
குற்றப் பிரிவு
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம்
வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து கட்டுப்பாடு
கடற்கரை மற்றும் சுற்றுலா பிரிவு
குற்ற புலனாய்வு மற்றும் குற்றங்கள் தடுப்பு பிரிவு
குற்ற அறிக்கை பிரிவு
பொலிஸ் கென்னல்ஸ் பிரிவு
சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்
குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு பிரிவு
No comments:
Post a Comment