சஜித் அணியின் அழைப்பை நிராகரித்தார் மங்கள : முகநூலில் விமர்சித்து பதிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

சஜித் அணியின் அழைப்பை நிராகரித்தார் மங்கள : முகநூலில் விமர்சித்து பதிவு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என அதனை மறுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மங்கள சமரவீர மீண்டும் கட்சியில் இணைய ஆர்வமாக இருந்தால், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜெயவிக்ரம நேற்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். நமது நாடு அதன் கொள்கை திசையில் மொத்தமாக திரும்புவதற்கு தீவிரமாக முயல்கிறது. நன்றி, ரெஹான் ஆனால் உங்கள் அன்பான அழைப்பிற்கு நான் வருத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment