மட்டக்களப்பு கரடியனாற்றில் மாடு மேய்ப்பவர் காட்டு யானை தாக்கி பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

மட்டக்களப்பு கரடியனாற்றில் மாடு மேய்ப்பவர் காட்டு யானை தாக்கி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவு குடாவெட்டை வயற் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது 57) என்பவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

சடலம் கண்டெடுக்கப்பட்டு சனிக்கிழமை 03.07.2021 உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழமைபோன்று மாடு மேய்க்கச் சென்றவர் மாலையாகியதும் வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபொழுது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குடாவெட்டை காட்டுப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய காட்டுப் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூவர் மரணித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment