நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணிகள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணிகள் இடைநிறுத்தம்

டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியை தனது மூன்று நண்பிகளுடன் பார்வையிட சென்ற போது நேற்று (18) மாலை குறித்த யுவதி நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தடுமாறி விழுந்து காணாமல் போனார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இன்று (19) காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து காணாமல் போயுள்ள யுவதி லிந்துலை லென்தோமஸ் பகுதியில் வசித்த 19 வயதான மணி பவித்ரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனை கருத்தில் கொண்டு மேற்படி யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment