இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, தொடர்ச்சியாக 2ஆவது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (30) மாத்திரம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு (513,741) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், நேற்றையதினம் (28),
Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 442,523 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 66,219 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Pfizer தடுப்பூசி முதலாம் டோஸாக 4,999 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
- 1ஆவது டோஸ் - 925,242 பேர்
- 2ஆவது டோஸ் - 385,885 பேர்
Sinopharm:
- 1ஆவது டோஸ் - 7,639,488 பேர்
- 2ஆவது டோஸ் - 1,733,718 பேர்
Sputnik-V:
- 1ஆவது டோஸ் - 159,081 பேர்
- 2ஆவது டோஸ் - 14,503 பேர்
Pfizer:
- 1ஆவது டோஸ் - 199,100 பேர்
Moderna:
- 1ஆவது டோஸ் - 711,793 பேர்
அந்த வகையில் இதுவரை 96 இலட்சத்து 34 ஆயிரத்து 704 பேருக்கு (9,634,704) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
21 இலட்சத்து 34 ஆயிரத்து 106 பேருக்கு (2,134,106) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment