ஜிப்ஸி இசைக்குழுத் தலைவர் சுனில் பெரேரா சி.ஐ.டி.யில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 17, 2021

ஜிப்ஸி இசைக்குழுத் தலைவர் சுனில் பெரேரா சி.ஐ.டி.யில் முறைப்பாடு

ஜிப்ஸி இசைக்குழுத் தலைவர் சுனில் பெரேரா, தான் பாடிய ஒரு பாடலுக்கு வேறு சொற்களை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அவதூறானா பாடலை இயக்கியமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் அவமதிக்கும்படி எனது "Thaththa Mata Anapu Tokka" என்ற பாடலின் சொற்களை மாற்றியமைத்த பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் குறித்து முறையான விசாரணை கோரி சுனில் பெரேரா கடந்த 14 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அவரது பாடல்களில் அரசியல் நையாண்டி இருந்தபோதிலும், அவை ஒருபோதும் மற்றொரு தரப்பினரை புண்படுத்தும் வகையில் இயற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment