ஒருவேளை உணவுக்கேனும் உதவிடுங்கள்!! - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

ஒருவேளை உணவுக்கேனும் உதவிடுங்கள்!!

ஓட்டமாவடி பிரதேச செயலகதிற்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலைப் பிரதேசங்கள் நான்கு பக்கமும் அடைக்கப்பட்டு ஒரு வேளை உணவிற்கும் ஏற்பாடுகள் இல்லாமல் அல்லலுறும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எமது அமைப்பின் உலருணவுப் பொதிகள் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் நீங்களும் பங்குதாரர்களாகுங்கள்.

கடந்த கொவிட் ஊரடங்கு காலங்களிலும் எங்களால் முடிந்தளவு பல நல்லுள்ளங்களின் உதவியுடன் கஷ்டப்பட்ட உறவுகளுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை ஊரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கோவிட் மரணங்களால் தொடரும் தனிமைப்படுத்தலினால் அன்றாடக்கூலித்தொழில் செய்வோர் மற்றும் விதவைகள் எனப்பலரும் உண்ண உணவின்றிக் கஷ்டப்படுகின்றனர்.

இதை நாமனைவரும் அறிந்தும் வெளியில் சென்று உதவ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, தனவந்தர்கள், கொடையாளிகள் என உங்களிடம் நாம் வேண்டுவது ஒரு வேளை உணவுக்கேனும் இல்லாத மக்களின் பசியை இல்லாமல் செய்வதற்கு உங்களுடைய உதவிக்ககரத்தை நீட்டுங்கள்.

உதவிகளை வழங்க முன்வருவோர் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் வசதிக்கேற்ற வகையில் பணத்தை வழங்க முடியும் அல்லது எமது கணக்கில் வைப்பிலிடவும் முடியும்

தொடர்புகளுக்கு :
0756386481
0771241130
0756798935

கணக்கிலக்கம்:
340200160031034
AS-ZAFAR FOUNDATION
People's Bank
Oddamavadi

No comments:

Post a Comment