இன்று காலை 6.00 மணி முதல் மேலும் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 2 மாவட்டங்களில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அதன்படி கொழும்பு, கொலன்னாவை சேரபுர கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ ஆனந்தராம வீதியும், இரத்தினபுரி, கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டவல கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் அதிகளவான கொவிட்-19 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டடுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள மஹபாகே பொலிஸ் பிரிவில் உள்ள கெரங்கபொகுனா ஜோர்ஜ் வீதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment