எக்காரணம் கொண்டும் எவருக்கும் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி இல்லை - News View

About Us

About Us

Breaking

Monday, June 21, 2021

எக்காரணம் கொண்டும் எவருக்கும் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி இல்லை

பயணத் தடையானது தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் ஆனால் எக்காரணம் கொண்டும் எவருக்கும் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளினால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றாலும் அவை மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படாது என தெரிவித்தார்.

இந்நிலையில், மாகாணங்களுக்குள் நேற்று முதல் சுமார் 17 புகையிரத சேவைகள் திட்டமிட்டபடி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அத்தியாவசிய சேவைகளுக்காக இதுவரை இயக்கப்படும் ஏனைய பொது போக்குவரத்து சேவைகள் எவ்விதமான மாற்றங்களும் இன்றி இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment