யாழ். பல்கலைக்கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

யாழ். பல்கலைக்கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம்

ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் யாழ். பல்கலைக்கழக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்றையதினம் 02.06.2021 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏனைய பீடங்களில் 500 பேருமாக மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளதன் அடிப்படையில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய இன்றும், நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2100 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து இன்றும் நாளையும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment