களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் தொலைபேசி, போதைவில்லைகள் உள்ளிட்ட பொருட்களடங்கிய இரு பொதிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, களுத்துறை சிறைச்சாலையில் ஈ பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்களால் இரு பொதிகள் எரியப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகள் அந்த பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், அதிலிருந்து இரு தொலைபேசிகள், சிம் அட்டை, தொலைபேசி மின்னேற்றி, 17 போதை வில்லைகள் மற்றும் 10 புகையிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment