இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 577 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 16 ஆயிரத்து 534 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 3 இலட்சத்து 57 ஆயிரத்து 868 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 95,470 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment