மீள் அறிவிக்கும் வரை பிற்போடப்பட்டது பொலிஸ் திணைக்கள எழுத்து மூல தேர்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

மீள் அறிவிக்கும் வரை பிற்போடப்பட்டது பொலிஸ் திணைக்கள எழுத்து மூல தேர்வு

(செ.தேன்மொழி)

பொலிஸ் கான்ஸ்டேபிள் சேவையில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த, விண்ணப்பதாரிகளுக்கான எழுத்து மூல தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் கான்ஸ்டேபிள் சேவையில் இணைந்துக் கொள்வதற்காக விண்ணப்பத்திருந்த விண்ணபதாரிகளுக்கான எழுத்துமூல தேர்வு இம்மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவிருந்தது. இந்த தேர்வானது மீள் அறிவிக்கும் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு, அநுராதபுரம், காலி ,கண்டி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலேயே இந்த தேர்வுகள் இடம்பெறவிருந்தன. 

எனினும் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டு தேர்வுகளை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை 011-5811921, 011-5811925 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புக் கொண்டு அறிந்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment