கொரோனா தொற்று அல்லது தனிமைப்படுத்தப்படும் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது கட்டாயம் - நிறுவன தலைமைகளுக்கு தொழில் அமைச்சர் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

கொரோனா தொற்று அல்லது தனிமைப்படுத்தப்படும் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது கட்டாயம் - நிறுவன தலைமைகளுக்கு தொழில் அமைச்சர் பணிப்பு

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம்பளத்தை உரிய நிறுவனங்கள் வழங்க வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

தனியார்த்துறையில் பணிபுரியும் 35 இலட்சம் ஊழியர்கள் மாத்திரமல்ல அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களில் ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கு உரித்தானவர்கள் அனைவருக்கும் கட்டாயம் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

கொவிட்19 தொற்று காரணமான பணிக்கு வருகைத்தர முடியாது போனவர்களுக்கு அரைசாசி சம்பளத்தை வழங்குவது தொடர்பில் முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 தொற்றுக் காரணமாக தனியார் நிறுவனங்கள் பல வாரங்கள் மூடப்பட்டாலும் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளத்தை வழங்க வேண்டும்.

நட்டமீட்டும் நிறுவனங்களாக தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரம் குறைந்தபட்டச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 14,500 ரூபாவை வழங்க வேண்டும். சம்பளத்தை செலுத்தாதுள்ள நிறுவனங்கள் தொழில் தொடர்பில் தொழில் அமைச்சுக்கு தெரியப்படுத்துமாறும் தொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment