களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் போதைப் பொருட்கள் மற்றும் தொலைபேசி அடங்கிய பொதிகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் போதைப் பொருட்கள் மற்றும் தொலைபேசி அடங்கிய பொதிகள் மீட்பு

(செ.தேன்மொழி)

களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்த போதைப் பொருட்கள் மற்றும் தொலைபேசி என்பவை அடங்கிய பொதிகள் பல சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் பீ பிரிவு வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 

இவற்றிலிருந்து 142 போதை மாத்திரைகள், 1 கிராம் ஐஸ், 5 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் கஞ்சா ஆகிய போதைப் பொருட்களும், தொலைபேசி ஒன்றும், புகையிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவையனைத்தும் விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment