நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக சுகாதார வழிடுமுறைகளை பின்பற்றுவது முக்கியமானதொன்றாகும்.
அந்த வகையில், குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை, எனினும், அதே குடும்பத்தை அல்லாத வேறு உறவினர்களுடன் சேர்ந்து பயணிக்கையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வேறு உறவினர்களுடன் சேர்ந்து பயணிக்கையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கான காரணம் அவர்கள் பிரிதொரு இடத்திலிருந்து வந்திருக்கக்கூடுமென என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment