வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா

வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (15.05.2021) பிற்பகல் வெளியாகின.

அதில், வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் வவுனியாவில் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment