பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் கைது!! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் கைது!!

ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவின் மகன் ரகித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (19) இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது ஜீப் வண்டியில் பயணித்த ரகித்த ராஜபக்‌ஷ எதிரே வந்த காருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காரில் வந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, காலி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ரகித்த ராஜபக்‌ஷ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இன்றையதினம் (20) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment