ஹொங்கொங் ஊடக அதிபர் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

ஹொங்கொங் ஊடக அதிபர் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு

நகரின் ஜனநாயக சார்பு இயக்கத்திற்கு சமீபத்திய அடியாக ஹொங்கொங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2019 இல் அங்கீகரிக்கப்படாத அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்து பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஏனைய பிரதிவாதிகளில் "ஹொங்கொங்கின் ஜனநாயகத்தின் தந்தை" மார்ட்டின் லீ மற்றும் சிரேஷ்ட ஜனநாயக சார்பு நபர்களான ஆல்பர்ட் ஹோ மற்றும் லீ சியூக்-யான் ஆகியோரும் அடங்குவர்.

காவல்துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தபோதும் 2019 ஆகஸ்ட் 18, அன்று ஹொங்கொங்கில் அமைதியான போராட்டத்தை ஏற்பாடு செய்து பங்கேற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி அமண்டா வூட்காக் இன்று வியாழக்கிழமை பிரதிவாதிகளை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். மேலும் அவர்களுக்கு மற்றொரு திகதியில் இதற்கான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

"2019 ஆகஸ்ட் 18 அன்று அனைத்து பிரதிவாதிகளும் அங்கீகரிக்கப்படாத சட்ட சபைக்கு ஏற்பாடு செய்தார்கள் என்பதை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முடியும்" என்று நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த முடிவு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 20 நாள் விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment